Wednesday, August 08, 2018

தொண்ணுற்றைந்தை தொட்டுவிட்ட தொல்காப்பியமே

விழி வழியும் கண்ணீர் துளி துடைக்
வழியின்றி கலங்குகின்றள் தமிழ்த்தாய்
மொழி காத்த தலைவா உன் மீளா உறக்கத்தால்
ஒளியிழந்து கிடக்கிறது தமிழ் தேசம்

கரகரத்த காந்தக் குரலோனே
கரும்பாய் தித்தித்திக் கனிச்சுவை சொல்லோனே
கரைகானா தமிழ்ப் பெருங்கடலே
கருணைமிகு கலங்கரை விளக்கே

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின்
போர்வாளே
பெரியாரின் பெருமைமிகு மாணவனே
புரட்சி தலைவனின் புனித நண்பனே
பெரும் பகுத்தறிவு பகலவனே

உன் உயிர் மூச்சு இன்று கலந்தது காற்றில்
என் தமிழ்த்தாயின் பொன்மகனே
தொண்ணுற்றைந்தை தொட்டுவிட்ட தொல்காப்பியமே
இனி எனறு விடியும் எங்கள் தமிழ்  உலகு உதயசூரியனே நீ இன்றி

1 comment: