Tuesday, March 11, 2025

விரும்பினால் முளைக்காது

விரும்பினால் முளைக்காது விதை












விரும்பினால் முளைக்காது விதை
விதைத்தால் தான் முளைக்கும்
வருந்தி உழைக்காது
வாழ்வு உயராது -நீ உணர் அதை

கனவுகள் கண்ணாடியை போல
கவனித்தால் முன்னேறிப் போகலாம்
கவலைகள் காற்றுக் குமிழ் போல-உடைத்து
கடந்தால் களிப்புடன் வென்றாடலாம்

சோம்பல் எப்போதும் சோறிடாது
சோர்வில்லா உழைப்பு சோம்பல் தராது
சேரிடம் தெளிந்தால்
செல்வதில் வெல்வதில் தடையிருக்காது

வெட்டிப் பேச்சுக்களை வெட்டிப்போடு
வீணர் கூட்டத்தை விட்டு வெளியேறு
விசையுறும் வலிமை நிறைந்தது இளமை
விளைந்த ஆற்றலை வீணாய்யாக்குதல் மடமை

விரி வானே உன் எல்லை
வீணாய் இருந்தால் வெற்றியில்லை
விடமுயற்சியால் தோல்வியில்லை
விழித்திடு உழைத்திடு வீழ்ச்சியில்லை

முயற்சித்த மனிதன் வீழ்ந்ததில்லை
முடியாதென்பது உலகில் இல்லை
முயலாமை வெல்வதில்லை
முயன்று பார் துன்பமில்லை

வீழ்வதில் தவறில்லை
விதி என வாழ்தல் சரியில்லை
வீருகொண்டு எழு
விலங்குகள் அறு விடுதலை பெறு

வில்லின் வேகம் நாண் வளையும் வரை
வேலின் வேகம் கைபின் செல்லும் வரை
வெற்றியின் வேகம் முயற்சிக்கும் வரை
வெல்வதன் நோக்கம் நேர்வழி செல்லும் வரை

சிற்பமாய் சிலை சிரிக்க சிற்பியிடம்
சீராக தலையில் அடிவாங்கும் உளி
சிகரங்களின் உயரம் தொட உழை
சிந்தித்து செயல்படு வலி திறக்கும் வழி

எல்லோரும் ஓர் நிறையே
ஏழ்மை என்பது நிலையல்லவே
ஏன் என்ற கேள்வியால் தான்
எழுந்திடும் விடியலின் புத்தொளிதான்

தாழ்ந்தவர் யாரும் தரணியில்யிலை
தளர்ந்தவர் யாரும் வென்றதில்லை
தேனடை கூட முழுகூடகும் சிறு ஈகளாலே
தேய்பிறை கூட வளரும் முழுமதியாக

தொலைதுர பயணத்தின்
தொடக்கம் முதல் அ(ப)டியில் தான்
தொட்டுவிட துணிந்தால்
தொடுவானம் கூட காலடியில்தான்

தேடலே இன்பம் தேடலே வாழ்வு
தேடலுக்கு இல்லை முடிவு
தேடாமல் இல்லை விடிவு -தேவையின்
தேடலே கண்டுபிடிப்பின் தாய்

செக்குமாட்டு வாழ்கை தேவையில்லை
செதுக்கு உன்னை செயல் கொண்டு
கொக்குபோல காத்திரு
கெக்கிபோட்டு தூக்கிடு

செய்வன செய் திருந்த
செய் செலவுகள் வரவறிந்து
செயலில் இறங்கு
செய் தொழில் பல

பாறையிலும் வேர்விட்டு
பசுஞ்செடி தளைக்கும்
பற்றுக் கொம்பு ஊன்றி பாங்காய் வளர்த்தால்
படர்ந்து பூத்து காய்த்து கனியும்

நம்மிரு கைகளின் துணை கொண்டு
நன்னடை கால்களின் வழிநடையால்
நம்பிக்கையோடு களமாடு
நல்ல காலமும் நற்துணையாகும்

நல்வழிதானே உன் படை
நம்பி துணி கிடைக்கும் விடை
நற்தொழில் தேடு
நலம் பல தரும் நாடு

நம்பிக்கை கொண்டால்,
நாளும் நம் வசமே
நல்லன செய்தால்
நம் வாழ்வும் நல்வரமே

வெற்றி யாற்கும் பொதுவாகும்
வென்றவர் பின்தன் நிற்க்கும் உலகு
வென்றபின் நீ அகிலதின் பொது என பழகு
வென்றுபார் உள்ளங்களை எல்லாம் அழ
கு

No comments: