Thursday, February 23, 2012

இணைந்த மனங்கள்


 கரும்பு சாறு பிழிந்து அதில்
அரும்பு தேன்துளி அள்ளி கலந்த
விரும்பு க(ன்/ண்)னியவளின்
குறும்பு கவிதை மொழி
மருத மாங்குயிலிசையோ ?

குடகு மலை குளிர் நீரோடையோ ?
குற்றால மலைச் சாரல் சூடிய
வற்றாத வான் சுரந்த புனலாடையோ ?
குமரியவள் கொஞ்சும் பேரழகு
கூர் வாளாய் நெஞ்சின் வேரருகில்

குங்குமம் குழைத்து பூசிய
குவிந்த கோவை இதழ்களில் என்றும்
குன்றா சிவப்போடு குறு நகை பூத்த
குடும்ப விளக்கவள்
குறையில்லா கற்புடை சுடர் நெருப்பு

கூடல் நதி நடையாளின்
ஆடல் கொடியிடையழகும்
மடல் அவில் வாழை தண்டு கால் அழகும் கண்டு
அடலேறு அரிமாக்கள்
கடல் மீறும் பேரலையாய்

கரை கிடக்கும் கட்டு மரந்தனை
நுரை பொங்கும் பெருந்திரை சமுத்திரத்தில்
விரைந்தோட்டி வலைநிரை கயல் வாரி வரும்
திரைகடல்லோடி தேடி எடுத்த
நிறை ஒளி நீல முத்தோ அவள்

பிறை மதி தெப்பத்து மீனவன் வலை
சிறைபட்ட வலம்புரி வெண்சங்கு நிறத்தாள்
இறைத்தெரிந்த சில்லரை காசு போல் சிரித்து
பறையரை போர்முனை முன் பாயும் மறவர் தம்
பாறை மனங்களையும் பார்வையால் சூறையாடிவிட்டாள்

செறுபகைச் சமர்க்களத்தில் சேணை முன்னவனின்
உருவிய உறைவாள் உருட்டிய தலைகள்
உயரக் குவிந்து உதிர்த்த செங்குருதி சேற்றில்
ஊண் தோடியலையும் கழுகுகளாய்
ஊதய நிலவை உரிமையாயக்கிட காளையர் கூட்டம்

இருமலர் விழியுடை
இதழ் விரி பூங்கொடியிடையாளை
இதமான தருணம் பார்த்து
இழுத்து செல்ல
இரவும் பகலும் இமை மூடாது

காளையான் கனவுகளை
காற்று வழி செய்தியாய் கோட்டு
காற்றலை மீறிய மின்னலை வேகத்தில்
கருமணல் கான் வெளியும்
கடுமலை கரட்டு வழியும் தாண்டி தலைவனவன்

பெருந்தோல் தடக்கை கூர்வாள்
சுழற்றும் பேரழகு ஆணழகன்
இரு புரவி இணைத்து பூட்டிய
தேர்தனில்

அரும்பு மீசை அரிமா அவன்
குறும்பு பார்வை வீசி
திரும்பிய போது
திருவாுர் தேர்ச்சிலையாய்
தெருமுனை தனில் திருமகள்

நீருறை நிறை குடந்தனை
சீரிடை சிவக்க தாங்கி
நேர்நடை கால்கள் நெறியோடு செல்ல
கூர்கயல் விழி நிலம் நோக்க
குறுக்கு சலையில் நேர் எதிர்
பொன்மகள் வந்தாள்

திண் தோல் புரவி
திமிரிக் கணைத்தே தாவிக் குதித்தது
திறனுடை மறவன் விசையோடு அடக்கி
திருமகள் முன்னே திமிராய் நின்றான்

வீதிதனில் யாருமில்லை
வீரன் கையில் சாதி முல்லை
விழி நான்கும் விலகவில்லை
எடுத்தான் காமன் கரும்பு வில்லை தோடுத்தான் காதல் மலர் அம்பை
வீழ்ந்த இதயங்கள் மீண்டு எழவே இல்லை

கார் குழல் கவிதையின்
கருவிழி மின்னலையும்
போர் திறன் காளையின்
கூர் வாள் பார்வையும்
ஓர் நிலையாகி ஓளி காதல் மலர்ந்தது

கைதாங்கிய காந்தமதி க(ன்)னியவளை
கண்ணே என்றான் காளை
காரிகையோ கண்ணாலா
காவல் இனி நீ தான் எனக்கென்றாள்
கவலை உனக்கேன் காலம் முழுதும் காப்பேன் என்றான்

இன்பப் பனி மழையில் நனைந்த
இளநங்கை இதயம் திறந்து
இனியவனே இனி நீ தான் நான் என்றாள்
இதயங்கள் இரண்டும் இணைந்தன ஒன்றாய்
இனி எவர் வந்து பிரிப்பார் இரண்டாய் ?

தனியாத காதல் தாகம்
தடையில்லா நதியாய் தாவியது
தடுப்பாதற்கு இனி யாருமில்லை
தாமரை பூங்கொடி தனக்கென
தரணியெங்கும் முரசறைந்தான் மறதமிழன்

தாரகையை தளிர் கரம்பிடித்து
தாரமாய்யாக்கிட
தவறாது பரிசம் தந்து
தன்னவளின் பெற்றோரிடம்
தாழ்மையுடன் வேண்டி  நின்றான்

உத்தரவு பெற்றே
உயிரில் உறைந்தவளைஉரிமையாக்கிட
உலகறிய நாள் குறித்து
உறவுகளை உடனழைத்து
ஊரெல்லாம் நேர் சென்றழைத்தான்

உறவும் நட்பும் உள்ளம் நிறைய
உடன் வந்து உளமாற வாழ்த்த
உதய வேளையில்
உள்ளங்கள் போல மாலைகள் மாறின

கண்மணியவளை கனமும் பிரியாது
மண்ணும் விண்ணும் உள்ளவரை மறவேன்
மனைவிதனை என மங்கள இசை முழங்க
தமிழ் மறை சாட்சியக தங்க தாலி கட்டி
தன் மனம் தந்தான் தலைவனவன்

Tuesday, September 20, 2011

சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்



  1. சாதி சான்றிதழ்
  2. வருமான சான்றிதழ்
  3. பிறப்பிடச் சான்றிதழ்
  4. இருப்பிடச் சான்றிதழ்
  5. வேளாண் சேவை இணைப்பு படிவம்
  6. விற்பகர் சான்றிதழ் - உரங்கள் (படிவம் அ)
  7. புதுப்பித்தல் சான்றிதழ் - உரங்கள் (படிவம்)
  8. பூச்சிக்கொல்லி பதிவு செய்வதற்கான சான்றிதழ்
  9. பூச்சிக் கொல்லி தயாரிப்புக்கான உரிமத்தை புதிப்பிக்கும் சான்றிதழ்
  10. பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல்  உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
  11. பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல்   புதுப்பித்தல்கான விண்ணப்படிவம்
  12. தமிழ்நாட்டில் குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
  13. சமூக நலம்
  • சத்யஅம்மையர் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் - விண்ணப்படிவம்
  • இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
  • கைம்பெண் மகளிரின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இலவச நோட், புத்தகம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
  • டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார், விதவை மறுமண நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவம்
  • அன்னை தெரேசா, அனாதை பெண் குழந்தைகளின் திருமண நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவம்
  • E.V.R.மணி அம்மையர் நினைவு ஏழை விதவை தாய்மார்களின் பெண் குழந்தைகளின் திருமண நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவம்
  • அரசு சேவை இல்லம் - மேல் நிலை படிப்புக்கான (இருப்பிட வகுப்பு) விண்ணப்படிவம்
  • அரசு சேவை இல்லம் - தையல் /அலுவலக சம்மந்தமான படிப்புக்கான (இருப்பிட வகுப்பு) விண்ணப்படிவம்
  • அரசு சேவை இல்லம்  - பொதுப் படிப்புக்கான விண்ணப்படிவம்
  • அரசு சேவை இல்லம் - புதிய பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்திக்கான விண்ணப்படிவம்
  • சேவை இல்லங்களில், சிறார்களை சேர்ப்பதற்கான விண்ணப்படிவம்
  • பணிப்புரியும் மகளிர்கான தங்கும் விடுதி - பதிவு விண்ணப்பம்
  • தமிழ்நாடு அரசு கலப்புத் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
  • பெண்களுக்காக குறுகிய காலம் விடுதியில் தங்குவதற்கான திட்டம்  - விண்ணப்ப படிவம்
  • பணிபுரியும் பெண்களுக்கான தின பராமரிப்பு மையத்துடன் இணைந்த தங்கும் விடுதியை விரிவுபடுத்த/கட்டுவதற்கான நிதி உதவியை பெறுவதற்கான மத்திய அரசு திட்டம்
  • முதியோர்கான ஒருங்கிணைந்த திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி பெறுவதற்கான மற்றும் கண்காணிப்பு, செய்வதற்கான விண்ணப்ப படிவம்
  • குழந்தை காப்பகங்களை தொடர்ந்து நடத்துவதற்கான விண்ணப்ப படிவம்
  • ஆதரவற்றக் குழந்தைக்கான திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
  1. தமிழ் நாடு ஆதி திராவிட வீடு கட்டும் மற்றும் மேம்பாட்டு நிறுவன கடன் பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
  2. பிறப்பு சான்றிதழ்
  3. இறப்பு சான்றிதழ்
  4. குழந்தை பெயர் பதிவு செய்தல்

மேற் காணும் சான்றிதழ்களின் விண்ணப்ப படிவங்கள் பெறுவதற்கான சுட்டி 
அரசு திட்டங்கள் & சேவைகள்

Wednesday, July 08, 2009

டி.வி.டி பிளேயர் விலையில் கணிணி



டி.வி.டி பிளேயர்  விலையில் கணிணி டிவியில் இணைத்துக் கொள்ளலாம் என்று கரூரில் ஒரு நிறுவனம் விளம்பரம் செய்துள்ளனர்.  விலை ரூ; 5500.- மட்டும். தைவான் நிறுவன தயாரிப்பு ,

SYSTEM CONFIGRATION
MACROCOM ENTERTAINMENT MC
80 GB  HARDDISK
256 MB RAM
DVD ROM
CORDLESS KEYBOARD / REMOTE / WEBCAM/ SMART CARD & READER
FRONT & BACK USP
FRONT & BACK SOUND
MODEM / LAN
உத்திரவாதம் இல்லை
கணிணி திரை இல்லை
UPS - இல்லை
ரூ; 5500 க்கு வாங்கினால் தகுமா?
கணிணி துறை நண்பர்கள் இது பற்றிய தங்கள் ஆலோசணை மற்றும் கருத்துக்களை தந்து உதவுங்கள்

Monday, July 06, 2009

நான்கு எருதுகளும் ஒரு சிங்கமும்

அன்னையின்றி எவரும் இந்த


மண்ணைக் கண்டதுண்டோ தமிழா!- அந்த

அன்னை காட்டிய மண்ணையிழந்த

உன்னை மண்ணில் மதிப்பாருண்டோ தமிழா!



முன்னைய பழங்கதைகள் பல பேசியே

முழுவதையும் தொலைத்துவிட்டோம் தமிழா! –நம்மில்

முரண்பட்டுக் கிடந்ததன் விளைவுதானே இன்றைய

முட்கம்பி வேலி கொட்டடி சிறையடா தமிழா!



கொத்துக் கொத்தாய் உன் குருதி உறவுகள்

செத்து மடிந்தபோது பக்கத்தில் தானே இருந்தாய் தமிழா!

அத்தனை கொடுமைகள் கண்டும் காணதவனாய் உன்

நித்திய பணிகளுக்குள் அமிழ்ந்துவிட்டாயே தமிழா!



வாழ்விடமிழந்து வாழ்வினையுமிழந்து

வழியின்றி வலியோடு வந்தவர்தமை

வாரியணைத்தோம் நாம் ஆயினும் அவர்

வாழ்வில் இன்புற வாழவைத்தோமா? தமிழா!



தனித்தனியே பலர் நம்மில் பல

தியாகங்கள் புரிந்தோம் தமிழா!

ஆயினும் அவையாவும் விலலுக்கு

இறைத்த நீராய் ஆனது தமிழா!



நாளை ஒருவேளை உனக்கிந்த

நிலை வரலாம், வரும் தமிழா!

அன்று எவர் வருவார் வந்துனக்கு உதவுவார்

என்று எண்ணியதுண்டோ தமிழா!



ஒன்னாம் வகுப்பு பிள்ளைகட்கு ஒன்று பட்டால்

உண்டு வாழ்வென்றுணர்த்த நான்கு எருதுகளும்


ஒரு சிங்கமும் என்ற கதை சொன்னோமே தமிழா!

அது அவர்கட்கு மட்டும் தான் நமக்கில்லையோ தமிழா!



இந்திய, ஈழ, மலையக, மலேய, கனடிய

சிங்கை தமிழர் என்று இன்னும் பல பல பிரிவுகள்

நம்மில் இன் நிலை ஒழித்து என்று எங்கு சங்கம்மாவோம்

சங்கத் தமிழராய் சிந்தித்ததுண்டோ தமிழா!

Saturday, January 31, 2009

அறப்போராய் பற்றி பரவட்டும் நமது அஞ்சலி



தூத்துக்குடி பொன் முத்தே


தூய தமிழ் நல் வித்தே

துடிதுடித்து நீ செத்து மடிந்தே

தூண்டிவிட்டாய்யடா

தூங்கிய எம் தமிழ் உணர்வை



மாண்டவன் நீயாகி

மாநிலத்தார் மனங்களில் எல்லாம்

மறையாத கதிரவனாய்

மறதமிழ் வீரனாய் மீண்டும் நீ

மறு பிறப்பெடுத்துவிட்டாய்



ஆண்டவனையும், ஆள்பவனையும்

ஆளுக்கு ஆள் வேண்டி நின்றோம்

ஆங்கே கொத்துக் கொத்தாய் சாவும்

ஆதி தமிழனைக் காப்பாற்ற

ஆருமில்லை என்று நீ ஆதங்கம் கொண்டாயோ



நீ பற்றவைத்த தீ

பற்றி பரவிடட்டும்

அறப்போராய்

அன்னை தமிகமெங்கும்

அதுவே உமக்கான எமது அஞ்சலி

Wednesday, November 19, 2008

மது+மயக்கம்=மரணம்

மதுவெனும் போதையில் விழுந்துவிட்டான்
மதிப்புறு தாயையே விழுங்கிவிட்டான்
மதிமயக்கும் மதுவின் மாயையினால்
மனம் பழக்கி வாழ்வினை அழித்துக் கொண்டான்

தினம் தினம் குடித்து வந்தான்
பணம் பணம் என்றே பறித்துச் சென்றான்
மனம் போன போக்கிலே நடந்து கொண்டான்
மானம் போனது அறியாமல் மயங்கி நின்றான்

குடும்பமது வறுமையிலே
குழந்தை குட்டிகள் பட்டினியால்
குடிப்பதற்கு கூழுமில்லை
உடுப்பதற்கு துணியுமில்லை

கஞ்சிக்கு வழியில்லை
கால் காசு வரவில்லை
கட்டியவள் கெஞ்சினாலும் விடுவதில்லை
கொடுங்குடியால் கெட்டழிந்தான்

நஞ்செனும் மதுவினை நாடியதால்
நல்வாழ்விழந்தான்
நாடி நரம்புகள் தளர்ந்து
நடைதடுமாறி நிலைகுலைந்தான்

மொந்தையில் கள்ளுண்டு கட்டிய
கந்தையையும் கிழித்துக் கொண்டு
மந்தையிலே மல்லாந்து நீ கிடக்க
சந்தையிலே புதுசு புதுசா பலசரக்கு

கொண்டு வந்து இறக்குதடா நமதரசு
கண்டுங் காணம குடிச்சவன் கூட
கண்டபடி குடிச்சுக் குடிச்சு – தன்
கணக்கை முடிச்சுக்குரான்

பள்ளிக்கூட வாசலுக்கெதிரே
கள்ளுக்கடைகள் நாள் கணக்கா திறந்திருக்கு
பிள்ளைகள் நெஞ்சில் கல்விக்குப் பதிலா
கள்ளின் போதை நிறைஞ்சிருக்கு

சாராயம் விற்கும் காசுலதான் நம்ம
அரசாங்கம் நடக்குது
வரவு செலவு கணக்கை எல்லாம் குடிகாரன்
தரும் வருவாயே தீர்க்குது

குடிமகன்களே இனியாவது குடித்து குடித்து
குடல் வெந்து உடல் நொந்து சாகாமல்
குடிகெடுக்க்கும் குடியைவிட்டு ஒழி – உன்
குடும்பம் நலம்பெற விழிதிற விரியும் நல்வழி

முயன்றால் முடியுமடா உன்னால்
முரண்டு பிடித்தால் முடிவு பெரும் தொல்லையடா
இருண்டு போகும் வாழ்கையடா - இனி
இடுகாடு மட்டும் தான் உன் எல்லையடா

Saturday, October 18, 2008

பகை வெல்ல படை சேர்வோம்

அன்னை பூமி அருகில் இருக்க

ஆங்கோர் அவலம் நடக்குது காணீர்!

இன்னல் சூழ்ந்த இலங்கைத் தீவில்

ஈழம் பற்றி எரிகிறது பாரீர்!

உதிரச் சகதியில் நம் உறவுகள் செத்து மிதக்கையில்

ஊமையாய் நாம் இருந்திடல் ஆகுமோ?

எதிரியின் படுகொலைக்கு எண்ணிக்கை ஏதுமில்லை

ஏனென்று எதித்து கேட்பவர் எவருமில்லை

ஐய்யகோ! நாம் அருகிருந்தும் பயனில்லையே

ஒற்றுமை கொண்டு எழுந்திடுவோம் – நாமெலாம்

ஓர் இனம் என்றே உணர்ந்திடுவோம்

ஔதடம் கொண்டு ஓடிடுவோம்

அஃதை தடுப்பார் எவர் பார்த்திடுவோம்


கடலினைத் தாண்டி நம் கரங்கள் நீளட்டும்

காப்பது ஒன்றே நம் கடமையாகட்டும்

கிணற்றுத் தவளைகள் சில இங்கே கூச்சலிடும்

கீழ்மை மனத்தார் பலர் கேளி செய்வார் தயங்காதீர்.

குருதி சிந்திச் சாவும் தமிழர் உயிர் குடிக்கும்

கூற்றுவன் தான் சிங்களன் வெறியன்

கெடுமதியுடைய இன வெறியன் அவனிடம்

கேட்டால் கிடைக்குமா விடுதலை ?

கைகட்டி யாசித்தால் வருமா விடுதலை ?

கொடுமைகள் கோடி செய்தே கொன்றழித்தான் தமிழரை

கோழைகளாய் நாம் இருந்தது போதும்

கௌதமபுத்தன் பெயரில் இனக்கொலை செய்யும்

அஃறிணை மாக்களை அடக்கிட புறப்படுவோம்



சக்தி கொண்டு எழுவோம்

சாதல் ஒரு முறைதான்

சிலைகளாக நினைக்கும் தலைகளாக வேண்டாம்- நாம்

சீரிய செயலில் இறங்கும் தமிழர்களாவோம்

சுழல் வரும் கடலினிலே

சூழ்ந்தருக்கும் சூல் கொண்ட போர் மேகம்

செல்லும் வழி எங்கும் எதிரியின்

சேணைகள் பலவுடனே பெரும்

சைனியங்கள் சேர்ந்து வரும்

சொல்லொண்ண துயர் வரும்

சோர்வு கொள்ளல் ஆகாது

சௌகரியம் தேடாமல்

எஃகு போல் எதிர்த்து நின்று பகை வெல்வோம்