Tuesday, September 18, 2018

விடியும்


 வரும் வாட்டி வதைக்க
வரும் உன்னை ஆட்டிப் படைக்க
வரும் தொடர்ந்து தொல்லை கொடுக்க
வரும் எல்லையில்லா பேரிடர் பல

ஏற்றுக்கொள் எது வந்தாலும்
எதிர்த்து நில் மனம் தளராது
எதையும் தாங்கும் இதயம் உனதானால்
எதுவும் தயங்கும் உனைத்தாக்க

அச்சம் தவிர்த்தால் அது வெற்றி தரும்
ஆக்கம் மட்டுமே ஊக்கம் தரும்
அறிவு மட்டுமே உண்மை தரும்
அன்பு மட்டுமே அனைத்தும் தரும்

இழு முழு பளு கொண்டு இழு
உழு உன்னில் உள்ள களைகள் கலைய உழு
விழு வீழாமல் இருக்க  விழு
எழு விழுந்தாலும் வீறு கொண்டு எழு

ஏக்கம் தொலைந்தால் ஊக்கம்
ஊக்கம் தொடர்ந்தால் ஆக்கம்
துக்கம் தொலைந்தால் துவக்கம்
துன்பம் தொலைந்தால் இன்பம்

முடம் அல்ல எவரும்
முடிவல்ல எதுவும்
முடியும் நம்மால் எதுவும்
முயன்று பார் முடியும் எதுவும் விடியும்

No comments: