Saturday, January 31, 2009

அறப்போராய் பற்றி பரவட்டும் நமது அஞ்சலி



தூத்துக்குடி பொன் முத்தே


தூய தமிழ் நல் வித்தே

துடிதுடித்து நீ செத்து மடிந்தே

தூண்டிவிட்டாய்யடா

தூங்கிய எம் தமிழ் உணர்வை



மாண்டவன் நீயாகி

மாநிலத்தார் மனங்களில் எல்லாம்

மறையாத கதிரவனாய்

மறதமிழ் வீரனாய் மீண்டும் நீ

மறு பிறப்பெடுத்துவிட்டாய்



ஆண்டவனையும், ஆள்பவனையும்

ஆளுக்கு ஆள் வேண்டி நின்றோம்

ஆங்கே கொத்துக் கொத்தாய் சாவும்

ஆதி தமிழனைக் காப்பாற்ற

ஆருமில்லை என்று நீ ஆதங்கம் கொண்டாயோ



நீ பற்றவைத்த தீ

பற்றி பரவிடட்டும்

அறப்போராய்

அன்னை தமிகமெங்கும்

அதுவே உமக்கான எமது அஞ்சலி

1 comment:

Unknown said...

ovoru tamilanukum indha unavu undu....
innum yedhakaga kathirukirom...ithanai nadhadhum thudakadha irunkumalaavarkalin pirapil avarkall iiyam kolla vendum.

nandraa unarthi irukirir nanbha- raji