Saturday, January 31, 2009
அறப்போராய் பற்றி பரவட்டும் நமது அஞ்சலி
தூத்துக்குடி பொன் முத்தே
தூய தமிழ் நல் வித்தே
துடிதுடித்து நீ செத்து மடிந்தே
தூண்டிவிட்டாய்யடா
தூங்கிய எம் தமிழ் உணர்வை
மாண்டவன் நீயாகி
மாநிலத்தார் மனங்களில் எல்லாம்
மறையாத கதிரவனாய்
மறதமிழ் வீரனாய் மீண்டும் நீ
மறு பிறப்பெடுத்துவிட்டாய்
ஆண்டவனையும், ஆள்பவனையும்
ஆளுக்கு ஆள் வேண்டி நின்றோம்
ஆங்கே கொத்துக் கொத்தாய் சாவும்
ஆதி தமிழனைக் காப்பாற்ற
ஆருமில்லை என்று நீ ஆதங்கம் கொண்டாயோ
நீ பற்றவைத்த தீ
பற்றி பரவிடட்டும்
அறப்போராய்
அன்னை தமிகமெங்கும்
அதுவே உமக்கான எமது அஞ்சலி
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ovoru tamilanukum indha unavu undu....
innum yedhakaga kathirukirom...ithanai nadhadhum thudakadha irunkumalaavarkalin pirapil avarkall iiyam kolla vendum.
nandraa unarthi irukirir nanbha- raji
Post a Comment