ஊர்களாகி போனதனால்
உழைப்பவர் யாருமில்லை
உண்பதற்கு சோறுமில்லை
விளை நிலங்கள் பாலாகி
விதைகளெல்லாம் நஞ்சாகி
விவசாயம் செத்ததாலே
விலைவாசி ஏறுதம்மா
வாழ்வுக்கு வழியில்லை
வயிற்றுக்கு உணவில்லை
வருவாயும் போதவில்லை – அது
வரும் வழியும் தெரியவில்லை
கரு முகில் காதலிக்கும்
கனகத்து தருக்களெல்லாம்
கருவினிலே வெட்டுண்டு போனதால்
காரு மழை பெய்யவில்லை
நீரூறும் ஏரி, குளம், ஆறு எல்லாம்
தூர் பட்டுப் போனதாலே
ஏர் உழவு நடக்கவில்லை
எவ்வழியும் கிடைக்கவில்லை
ஏசமான சாதியெல்லாம்
எள்ளி நகைக்குதம்மா
ஏழை சனமிங்கு ஏதுமின்றி
ஏதிலியாய் தவிக்குதம்மா
வாரம் ஒரு புது கட்சி
வீர முழக்கமிட்டு
வரிசையாய் பிறக்குதம்மா
விடுதலை தருவதற்கு
வளரச்சி ஏதுமில்லை
வறுமை தான் ஒழியவில்லை
வன்முறை ஓயவில்லை
வழக்குகள் தீரவில்லை
வீண் சண்டை தான் முளைக்கிறது
விளக்கங்கள் தேனாய் இனிக்கிறது
விடையேதும் கிடைக்கவில்லை
விடியல் தான பிறக்கவில்லை
இருந்த, இல்லாத ராமனுக்கு
இருக்கிறது இரு குழுக்கள்
இவை மறந்தும் மக்களை
நினைப்பதில்லை
பொய்யும் புரட்டும்
பொதுவாழ்வாய் போனதால்
களவும் கையூட்டும்
கைகோர்த்து திரியுதம்மா
மண்ணும் மணலும்
பொன் முட்டை போடுவதால்
பகல் கொள்ளை பங்குக்கு
புதிது புதிதாய் பூக்குதம்மா
புரிந்துணரவு ஒப்பந்தங்கள்
கல்விதனை காசுக்கு
விலை கூவி விற்றுவிட்டு
காண்பதற்கு இலவசமாய்
வண்ணத் தொலைக் காட்சி
தரம் கெட்ட நிகழ்சிகளால்
தமிழ் கொலை செய்திடவே
கணக்கின்றி தோன்றுதம்மா
தினம் ஒரு சின்னத் திரை
ஐயகோ!
அழுகிப்போன அரசியலை
நெறிப்படுத்துவது எந்நாளோ- ஏ
நினைவிழந்த தமிழகமே
நீ என்று நீடு துயில்
நீங்கி எழுவாயோ?
1 comment:
நன்றாக எழுதி இருக்கிறீர்கள்..வாழ்த்துகள்
Post a Comment