தலைக் கவசம் அணியாத தி.மு.க உறுப்பினர் எச்சரிக்கப்பட்டதால் காவல்
நிலையம் முற்றுகை – செய்தி தமிழ் ஓசை
கரூர் நகரில் கவசம் அணியாது இரு சக்கர ஊர்தியில் சென்ற தி.மு.க உள்ளாட்சி உறுப்பினரை காவல் துறையினர் எச்சரித்த போது அவர்களிடையே வாக்குவாதம் எற்ப்பட்டது. மக்கள் நெருக்கம் மிகுந்த லைட் ஹவுஸ் பகுதியில் இந்நிகழ்வு நடைபெற்றதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆத்திரமடைந்த தி.மு.கவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கரூர் நகராட்சி உறுப்பினராக உள்ள தி.மு.கவைச் சேர்ந்த திரு. பாலகுரு லைட் ஹவுஸ் முனை பகுதியில் இரு சக்கர ஊர்தியில் சென்ற போது தலைகவச ஆய்வில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் சுப்புலட்சுமி பாலகுருவினை பிடித்தார். அப்போது நான் தி.மு.க உறுப்பினர் என பாலகுரு தெரிவித்தார். அதனால் அவர் உயர் அதிகாரிகளை பார்த்துவிட்டு செல்லுமாறு கூறினார்.
இந்நிலையில் ஆய்வில் ஈடுபட்டிருந்த மற்றொரு பெண் காவலர் இராஜேஸ்வரி பாலகுருவை கண்டித்தார். அதனால் பாலகுரு அந்த இரு காவலர்களிடமும் கடும் வாக்குவாததில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் நிகழ்விடத்த்திற்கு விரைந்து வந்தனர். இந்நிலையில் தகவல் அறிந்து வந்த தி.மு.கவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இரு பெண் காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுப்தாக உயர் அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து தி.மு.கவினர் காவல் நிலைய முற்றுகையை கைவிட்டனர்.
இந்நிலையில் பெண் காவலர்கள் இருவரும் தங்களை பணி செய்யவிடாமல் தடுத்தாதாகக் கூறி உயர் அதிகாரிகளிடம் முறையீடு அளித்தனர். இந்த முறையீட்டின் படி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தலைக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணையை செயல்படுத்துவதில் காவல்துறைக்கு இதுபோன்ற அரசியல்வாதிகளின் இடையூறுகள் கட்சி வேறுபாடு இன்றி ஏற்படுகிறது. இது தவிற பல தரமற்ற போலி தலை கவசங்கள் சந்தையில் விற்ற்க்கப் படுகின்றன. இது பற்றி அரசும் நீதி மன்றமும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1 comment:
test
Post a Comment