Thursday, October 11, 2007

நல் வாழ்த்து

எகிப்தின் நைல் நதியாய்
என் வாழ்வில் வளம் சேர்க்க வந்தாய்
எந்நாளும் இன்புற்று இருக்க
ஏழிசையாய் யாழினிசையைத் தந்தாய்

ஏழை எனது பாலை வயல்வெளியை
ஆழ உழுது பண்படுத்தி
அன்பு பயிர் வளர்க்க வந்த
ஆனந்த மழை துளியே

எனக்கெனப் பிறந்த
எழில் நிலவே
எனுயிரில் கலந்த
பொன்னொளியே

வீசு தென்றல் கொண்டு வந்த
பேசும் கீதமே
பாச மழையில் எனை நனைக்கும்
வசந்த ராகமே

இந்நாள் இது இனிய நன்னாள்
என் இதய அரசி நீ
இப் புவியினில் பிறந்த பொன்னாள்
இன்று போல என்றும் வாழ்க வாழ்க

No comments: