எகிப்தின் நைல் நதியாய்
என் வாழ்வில் வளம் சேர்க்க வந்தாய்
எந்நாளும் இன்புற்று இருக்க
ஏழிசையாய் யாழினிசையைத் தந்தாய்
ஏழை எனது பாலை வயல்வெளியை
ஆழ உழுது பண்படுத்தி
அன்பு பயிர் வளர்க்க வந்த
ஆனந்த மழை துளியே
எனக்கெனப் பிறந்த
எழில் நிலவே
எனுயிரில் கலந்த
பொன்னொளியே
வீசு தென்றல் கொண்டு வந்த
பேசும் கீதமே
பாச மழையில் எனை நனைக்கும்
வசந்த ராகமே
இந்நாள் இது இனிய நன்னாள்
என் இதய அரசி நீ
இப் புவியினில் பிறந்த பொன்னாள்
இன்று போல என்றும் வாழ்க வாழ்க
No comments:
Post a Comment