Monday, November 13, 2006

எழுச்சி தீபம் எற்றுவோம்

எழுச்சி தீபம் எற்றுவோம்
ஆனந்த சுதந்திரம் அடைந்தே
ஆகிவிட்டன ண்டுகள் ஐம்பதுக்கு மேலே
ஆயினும் இன்னும் எம் மக்கள்
அன்றாடங்காய்ச்சிகளாய் வறுமை கோட்டுக்கு கீழே

அணி அணியாய் அரசியல் கட்சிகள்
அனைதுக்கும் அரசாள அடங்காத சைகள்
அரியாசனம் ஏறிடவே ஏதும்
அறியாத அப்பாவி மக்களை ஏய்திடுவர்

ஆளுக்கு ஒரு கொள்கை கொள்வர்
அச்சமின்றியே அரசு சொத்தை அள்ளிக்கொள்வர்
அவர் ளவில்லை எனில்
ஆட்சிமுறை தவறு என்பர்

அடுத்தவர் செய்ததை தடுத்திடுவர்
அதை மறைக்க அடிக்கடி அடிக்கல் நாட்டிடுவர்
அத்தனையும் தான் என்று அகந்தை கொள்வர்
அரசியல் மாண்புதனை மண்ணுக்குள் புதைத்திடுவர்

அனல் பறக்க மூழங்கிடுவர் மேடை தனில்
ஆருயிர் நண்பனின் கூட்டாட்சி சிறப்பினை
அடுத்த கணமே யிரம் அணி தாவிடுவர்
அதன் பின்னே அரிசந்தர மூர்த்தியாகிடுவர்

அத்தனையும் உண்மை என்றெண்ணி
ஆண்டு பலவாக ஏமாந்து
அடுத்த வேளை சோற்றுக்கே வழியின்றி
அன்னை பூமியின் மக்கள் எல்லாம் அனாதைகளாய்

அனாதை தேசத்து அனாதைகளே
அறியாமைக்குள் அமுங்கி கிடந்தது போதும்
ஆர்த்தெழுங்கள் அநீதீகளுக்கெல்லாம்
அந்தீமை காலச் சடங்கு செய்திடுவோம்

அரசை நமதாக்கி முரசு கொட்ட
அனைவரும் வாக்குச் சாவடிக்கு
அக்னி சிறகு விரித்து புறப்பட்டு
அணையாத எழுச்சி தீபம் எற்றுவோம்

சு.பா

No comments: