மணவறை காணாத மலர்கள்
மணச் சந்தையிலே மணமில்லா மலரா நீ
பணச் சந்தையிலே பசையில்லா தாளா நீ
குணச் சிந்தையிலே கோமகள்(ன்) தான் நீ
பண்பு இருந்தென்ன ? கொள்வாரில்லை
வாழ்க்கை துணை தேடி வாடும் பொழுதுகள்
வழித்துணை ஒன்று கிட்டுமா என்ற ஏக்கம்
தலை சூடா பூக்காட்டு மலர் போல- நாளும்
இலை உதிரும் நாள்காட்டி தாளாக
எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கும்
என்ற மூன்றாம் இயக்க விதி கூட
எடை போடும் சமுதாயத்தில்
ஏழைகளுக்கு மட்டும் விதி விலக்காய்
ஏங்கி வாடும் எழில் வனப்பு பருவம்
எங்கோ ஒலிக்கும் மங்கள மணநாதம்
எரிமலை வெடிக்கும் உள்ளத்தில்
ஏக்கங்கள் பல தூக்கத்தை தொலைக்கும்
பிழைகள் என்ன ? பிரிவுகள் ஏனோ ?
பிழைத்தல் யாவருக்கும் பொது தானே
இழைத்திடல் தகுமோ இன்னல்
இது எவர் செய்த சதி வலை பின்னல்
கை கூடுகிறது காதல் கூட
கையிருப்பை சரிபார்த்த பின்தான்
மனங்களின் இணைப்பு கூட
பணத்தாள் எண் கூட்டைக் கொண்டுதான்
பணச் சந்தையிலே பசையில்லா தாளா நீ
குணச் சிந்தையிலே கோமகள்(ன்) தான் நீ
பண்பு இருந்தென்ன ? கொள்வாரில்லை
வாழ்க்கை துணை தேடி வாடும் பொழுதுகள்
வழித்துணை ஒன்று கிட்டுமா என்ற ஏக்கம்
தலை சூடா பூக்காட்டு மலர் போல- நாளும்
இலை உதிரும் நாள்காட்டி தாளாக
எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கும்
என்ற மூன்றாம் இயக்க விதி கூட
எடை போடும் சமுதாயத்தில்
ஏழைகளுக்கு மட்டும் விதி விலக்காய்
ஏங்கி வாடும் எழில் வனப்பு பருவம்
எங்கோ ஒலிக்கும் மங்கள மணநாதம்
எரிமலை வெடிக்கும் உள்ளத்தில்
ஏக்கங்கள் பல தூக்கத்தை தொலைக்கும்
பிழைகள் என்ன ? பிரிவுகள் ஏனோ ?
பிழைத்தல் யாவருக்கும் பொது தானே
இழைத்திடல் தகுமோ இன்னல்
இது எவர் செய்த சதி வலை பின்னல்
கை கூடுகிறது காதல் கூட
கையிருப்பை சரிபார்த்த பின்தான்
மனங்களின் இணைப்பு கூட
பணத்தாள் எண் கூட்டைக் கொண்டுதான்
முடிவில்லா தொடரியாய்
முதிர்கின்ற வயது
முற்றிய கதிர்களாக
முதிர் கன்னி(ண்ணன்)கள்
மணவறை காணாமலே மலர்கள்
மண்ணறை நோக்கி சரிகின்றன
மனநிலை மாறாத சமூகம்
மண்ணில் இன்னலை விதைக்கிறது
வினைப்பயனா ? விதிப்பயனா?
விடைபெறுமா? தடையறுமா?
எடைக்கற்கள் இல்லாத உறவுகள்
எங்கேனும் எப்போதாகிலும் துளிர்விடுமா?
No comments:
Post a Comment