Wednesday, September 18, 2019

இரண்டாம் தாய்

இரண்டாம் தாய்
 
தாயில்லாப் பிள்ளைக்கு எல்லம்
தாயாகிப் பாலூட்டும் இரண்டாம் தாய் நீ
தன் பிள்ளை தானே வளரும் என்று
தன் பாலை ஊரார் பயனுற தரும் அன்னை நீ

வாயில்லா ஜீவன் தான் நீ ஆயினும்
வாரித் தருவதில் வள்ளல்
வறுமையுற்ற ஏழைக்கெல்லாம்
வாழ்வளிக்கும் நீயே வாழும் குலசாமி

உணவளிக்கும் உழவருக்கு

உயிர் கொடுக்கும் தெய்வம்
உன்னை வளர்பவர் வாழ்வை
உயர்விக்கும் உன்னத நண்பன் நீ

உழவனை தொழுகின்றதாக கூறும் உலகம் அவன்
உழைப்பை உறிஞ்சி களித்திருக்கும்
உடல் பெருள் ஆவி அனைத்தும் தரும்
உன் உழைப்பால் வானுயரும் அவன் மதிப்பு

ஈன்ற கன்றுக்கு அன்புடன் பால் சுரந்து
ஈத்துவக்கும் இன்பம் உடைய பசுவே
ஈரமுள்ள நெஞ்சு கொண்ட உனை
ஈகை குணத்தில் மிஞ்ச யார் உளார்

மடிநிறைய பால் இருக்கு
மனம் நிறைய அன்பு இருக்கு
மண்ணுயிகள் எல்லாம் உன்னைப் போலானால்
 மாநிலத்தில் மகிழ்ச்சி தழைத்தோங்கும் 

No comments: