இரண்டாம் தாய்
தாயில்லாப் பிள்ளைக்கு எல்லம்
தாயாகிப் பாலூட்டும் இரண்டாம் தாய் நீ
தன் பிள்ளை தானே வளரும் என்று
தன் பாலை ஊரார் பயனுற தரும் அன்னை நீ
வாயில்லா ஜீவன் தான் நீ ஆயினும்
வாரித் தருவதில் வள்ளல்
வறுமையுற்ற ஏழைக்கெல்லாம்
வாழ்வளிக்கும் நீயே வாழும் குலசாமி
உணவளிக்கும்
உழவருக்கு
உயிர் கொடுக்கும் தெய்வம்
உன்னை வளர்பவர் வாழ்வை
உயர்விக்கும் உன்னத நண்பன் நீ
உழவனை தொழுகின்றதாக கூறும் உலகம் அவன்
உழைப்பை உறிஞ்சி களித்திருக்கும்
உடல் பெருள் ஆவி அனைத்தும் தரும்
உன் உழைப்பால் வானுயரும் அவன் மதிப்பு
ஈன்ற கன்றுக்கு அன்புடன் பால் சுரந்து
ஈத்துவக்கும்
இன்பம் உடைய பசுவே
ஈரமுள்ள நெஞ்சு
கொண்ட உனை
ஈகை குணத்தில் மிஞ்ச யார் உளார்
மடிநிறைய பால் இருக்கு
மனம் நிறைய அன்பு இருக்கு
மண்ணுயிகள் எல்லாம் உன்னைப் போலானால்
மாநிலத்தில் மகிழ்ச்சி தழைத்தோங்கும்
No comments:
Post a Comment