Sunday, September 02, 2018

பாழ்பட்ட பைந்தமிழ்நாடு

ஆறு பாழ் அழகு பாழ்
அக்கரை இக்கரை மரங்கள் பாழ்
ஆற்று மணலும்  பாழ் அதனால்
ஊற்று நீரும்  ஊரும் பாழ்

ஏரு பாழ் ஏருழவன் வாழ்வு பாழ்
எழிலழகு சோலைகள் பாழ்
கூறுகெட்ட குடிகளெல்லாம்
குடிக்கு அடிமையனதால் வீடு பாழ்

நாடு பாழ் நல்ல மழை காடு பாழ்
வாடுகின்ற வாழ்வுதனை  நினையாமல்
ஓடுகின்றர் ஓடேந்தி யாசகர் பேல்
ஓட்டுக்கு காசுவாங்க

செந்த வளங்களை சுரண்டிட விட்டுவிட்டு
சோறு தேடி தினம் அலையும்
சோற்று பிண்டங்களாய் நாம்
சாறு உறிஞ்சும் ஊழல்புழுக்களின் பிடியில்

விற்று முதலாக விதைத்திடுவார்
வெற்று வாக்குறுதிகளை
வெற்றி தமதென்று
வெட்கமின்றி கெக்கறிப்பார்

வேண்டுமட்டும் திருடிவிட்டு
ஆண்டுகள் சில மாண்டபின்
மீண்டும் மீண்டும் புது வேடமிட்டு
ஆண்டுவிட வந்திடுவார் ஆசைப்பட்டு

தலைமுறை தலைவரென்பார்
தலைவியின் வாரிசென்பார்
தெலைநேக்குப் பார்வையென்பார்
தெல்லையின்றிகூட்டுக்கெள்ளையடிக்க

தலைநிமிர்ந்தே தமிழ்நாடு
தழைத்தோங்க தன்னலமில்லா
தலைமை அமைவது என்நாளே
தலைநிமிர்ந்தே தமிழரும் நடப்பது என்நாளே

No comments: