Thursday, May 17, 2007

நம் தாய் நாடு

குமுறும் குமரித் தென் கடலலையினிலும்!
குளிரும் இமயத்தின் வெண் பனி மலையினிலும்!
ஒளிரும் வங்கத்து பொன் நிறக் கோதுமை!
விளையும் வயல்களிலும் இந்தியத் தாய் சிரிக்கின்றாள்!

பொன்னி நதி கொஞ்சி விளையாடும்
தஞ்சையின் நஞ்சை பூமியிலும்
தொன்னை இளங்கீற்று தெம்மாங்கு பாடும்
மலையாள கரையோரமும் தங்கி இளைப்பருகிறாள்

அரபிக்கடலில் அவள் ஆடி மகிழ்வாள் - அமுத
சுரபியாகி அகிலம் முழுதும் அருள் தாருவாள்
பிறருக்கு உதவிகள் செய்து உயர்த்திவிடுவாள் - தன்
வரவினில் செலவுகள் செய்து உயர்ந்திடுவாள்

உறுபகை வெல்ல போர் முனை புகுவாள்
உறவினை பலமாக்க நட்பு கரம் நீட்டிடுவாள்
அறிவினை மெருகேற்றி புதுமைகள் படைத்திடுவாள் -ஆயினும்
மரபினில் விலகாது மாண்பினைக் காத்திடுவாள்

வாய்மை கொண்டே வாழ்ந்திருப்பாள்
வளங்கள் கோடி வைத்திருப்பாள்
வையம் முழுமைக்கும் அன்பு ஈந்திருப்பாள்
வந்தே மாதரம் என்றே முழங்கிடுவாள்

No comments: