கோழிகூவும் வேளையில
கோவணத்த சுருட்டிக்கட்டி
எழுந்திருச்சு எருது புடுச்சு
எச பாட்டு படுச்சபடி
ஏற்றங் கட்டி நீரிரைச்சு
ஏரு பூட்டி சேரு புரட்டி
மேடு பள்ளம் நிரவிவிட்டு
வாய்க்க வெட்டி
வயலடிச்சு வரப்பு கட்டி
வண்டல் படியவிட்டு
பொன் விளையும் பூமி தாய
நெஞ்சுறுக வேண்டிக்கிட்டு
நெல்லுமணி விதையத்தானே
அளவாக அள்ளித் தெளித்து
நல்லபடி நாற்று விட்டு
சுட்ட சட்டி எடுத்து வந்து
சுண்ணாம்பு சாந்து குழச்சு
வட்ட வட்ட பொட்டு வச்சு
வைக்கோலு பொம்ம கட்டி
வரப்பு மேல நட்டிடுவோம்
ஆட்டு, மாட்டுக் கிடைபோட்டு
ஆவாரம்பூ தழை போட்டு
ஆழமாக ஏர் உழுது
அங்க அங்க அணைபோட்டு
ஐப்பசி மழைய மண்ணுக்கு பாச்சிடுவோம்
காஞ்ச மிளகா கடுச்சுக்கிட்டு
கம்மங் கூழு, களியுருண்டை
கஞ்சி தண்ணிய
கையகட்டி குடிச்சுக்கிட்டு
காட்டுல மேட்டுல
கவலையில்லம பாடுபட்டோம்
------ தொடரும்
1 comment:
சிறு குழந்தை வாய் பேசாது சைகை மொழி காட்டும் உணர்வு போல .
நெய்தல் நதிக்கரையில் கொட்ட பட்ட பல கூழ்களின் உணர்வு தோன்றுகிறது
என்றும் ஏன் வாழ்த்துக்கள் உங்களுடன்.
Post a Comment