Thursday, November 30, 2006

வாருங்கள் வாழ்த்துவோம்



எங்கும் நிறைந்த
செங்கதிர் பேரொளி
சிங்கத் தமிழ்ச்செல்வன் ஈஸ்வரமூர்த்திதங்கச்சுடரொளி
பொங்கும் முழுமதி
சங்க தமிழ்ச் செல்வி திலகவதி


அமிழ்தென இனிக்கும்
அகமது மகிழும் இல்வாழ்வில்
இணையும் இன்நாள்
இப் புவிக்கோர் பொன்நாள்
இன்ப மலர் பூக்கும் நன்நாள்

மழை தரு வானும் - செந்நெல்
மணி தரு வயலும்
அலையுறு கடலும் - பொன்னெழில்
ஒளி தரு கதிரும்
ஓங்கிய மலையும் - என்றும்
ஓயாத வளியும்
நிலையென நாளும்
நிலைத்தது போல

குறள் மறை கூறும்
குன்றா வாழ்வும்
குறையா வளமும்
மறையா கல்வியும்
மழலை செல்வமும்
மனம் நிறை இன்பமும்
நிலை பெரு ஆயுளும்
நிறையப் பெற்று

ஆண்டு பல்லாண்டு
அவனிதனில் அன்பு பூண்டு
ஆல் போல் தழைத்து
அருகு போல் வேறூன்றி
பெருகும் புது வாழ்வு
வாழ்க வாழ்கவென
வாழ்த்தும் வானம்பாடிகள்

மு .வையாபுரி , சு.சரவணகுமார் , ஆ.சுதர்சனன் , க.சக்திவேல்

வே.கனகராஜ் , க .வையாபுரி , க.சங்கர் , மு.நடராஜன்
சு.பா

நரிகட்டியூர்

No comments: