Saturday, November 03, 2018

தரு, மரம், தாவரம்


தரு, மரம், தாவரம்

புசிக்க கனிதந்து
பசிக்கு உணவாகும்
வசிக்க வீடாகும்
வாசிக்க தாளாகும்

படுக்க பாயாகும்
படைப்பவனுக்கு கோலாகும்
பாதைக்கு நிழலாகும்
பார்வைக்கு குளிராகும்

உடுக்க உடையாகும்
உடைக்க விறகாகும்
ஊருக்கு அழகாகும்
உயிருக்கு நல் காற்றாகும்

மலைக்கு சேயாகும் - வான்
மழைக்கு தாயாகும்
மழலைக்கு தொட்டிலாகும்
மனைக்கு கட்டிலாகும்

வையகம் செழித்து
வாழ்வாங்கு வாழ- நட்டு
வைத்தே வளர்த்திடுவோம்
வனச்சாமி மரங்களை

இயற்கை தந்த வரம்
இவ்வுகின்  உயிர்காவல்ராம்
இதனில் இல்லா வளங்கள்
இல்லை அது தன்னையே தரும் தரு, மரம், தாவரம்






No comments: