Wednesday, September 18, 2019

இயற்கை

முத்து முத்து பனித்துளியில்
முகம் காட்டி சிரிக்கும் மலர் இதழ்களை
முத்தமிடத் துடிக்கும் வண்டினங்கள்
நித்தம் நித்தம் தவிக்கிறது

மென் காலை புலர் பெழுது
பென் மஞ்சள் மலர் கொய்து
மின் வெண்பனி நூலெடுத்து நெய்த
கண்ணாடி சித்திரச் சேலையோ இது

கண்கள் மயங்கும் காட்சிப்பிழை தான்
காணக்கிடைக்காத கலை எழிலின் நிலைதான்
காற்று நுழைந்தால் கலைந்து விடும்
கவனம் சிதைந்தால் கணத்தில் மறைந்துவிடும்

சின்ன சின்ன நீர்க்குமிழிகளுக்குள்
சித்திர தூரிகை கொண்டு வரைந்த
சிதைவுறா இயற்கையின் சிறந்த படைப்பு ஒளிச்
சிதறலில் விளைந்த அழகின் சிரிப்பு

விந்தைகள் படைக்கும் இயற்கை ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை
விரியட்டும் வியப்பின் எல்லை இந்த
விடியலின் விடுகதை அழகை
விழி பருகி மதி மயங்காதார் யார் ஒருவர் உண்டோ

No comments: